உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பள்ளி மாணவி தற்கொலை

Published On 2022-04-22 15:57 IST   |   Update On 2022-04-22 15:57:00 IST
பெரம்பலூரில் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே எசனை 4-வது வார்டுக்குட்பட்ட தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு பேச்சாயி என்ற மனைவியும், சிந்துஜா (வயது 20), மகாலட்சுமி (15), இதன்யா (9) என்கிற 3 மகள்களும் இருந்தனர். செல்வராஜூம், பேச்சாயியும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

மகாலட்சுமி எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று வயிற்று வலி காரணமாக 2-வது மகள் மகாலட்சுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். தாய் பேச்சாயி காலையில் கூலி வேலைக்கு சென்று விட்டார். இதன்யா பள்ளிக்கும், சிந்துஜா கல்லூரிக்கும் சென்று விட்டனர்.

மதியம் 1 மணியளவில் செல்வராஜ் கடைவீதிக்கு சென்று டீ குடித்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அவர் வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, மின்விசிறியில் கட்டில் கட்டும் கயிற்றில் மகாலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதுகுறித்து செல்வராஜ் பெரம்பலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News