உள்ளூர் செய்திகள்
தேக்வாண்டோ வீரர்களுக்கு பதக்கம்
தேக்வாண்டோ வீரர்களுக்கு பதக்க வழங்கி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை தேக்வாண்டோ விளையாட்டு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான தேக்வாண்டே போட்டிகளில் பங்கு பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா அமேசிங் தேக்வாண்டே மார்ஷியல் ஆர்ட் அகடமி மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் விருது வழங்கும் விழா கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அலுவலகத்தில் நடைபெற்றது.
அமைச்சர் நமசிவாயம் மாணவமாணவிகளை வாழ்த்தினார். விழாவில் அமேசிங் டேக்வாண்டோ பள்ளி தலைவர் வேலு, தொழில்நுட்ப இயக்குநர் தாமஸ் மற்றும் பொருளாளர் அருள் மொழி வர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு அகடமி செயலாளர் ராஜ் மோகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் கவுன்சிலர் செல்வகணபதி செய்திருந்தார்.