உள்ளூர் செய்திகள்
உத்வாகநாதர் கோவிலில் உள்ள உத்தால மரத்தில் பூத்து குலுங்கும் மலர்கள்
குத்தாலம் உத்வாகநாதர் கோவிலில் உள்ள பழமையான உத்தால மரத்தில் பூக்கள் பூத்து குலுங்கியது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உத்வாகநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டதாக
ஐதீகம். இந்த கோவிலில் சிவபெருமான், பார்வதி தேவியைத் திருமணம் செய்து கொள்வ-தற்-காக கைலாயத்தில் இருந்து வந்த போது அவருக்கு நிழலாக உத்தால மரம் வந்துள்ளது. திருக்கல்யாணம்
முடிந்து சுவாமி, அம்பாள் கைலாயம் செல்லும் போது சுவாமி உத்தால மரத்தையும், தனது பாதரட்சையையும் விட்டுச் சென்றதாக வரலாறு கூறு-கிறது. 1500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில்
இன்றளவும் இந்த மரம் பசுமையுடன் காணப்படுகிறது. இந்த மரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாத கடைசியிலும், சித்திரை மாத முதல் வாரத்திலும் மலர்கள் பூப்பது வழக்கம். இவ்வாண்டு
இத்தலத்தில் உள்ள உத்தால மரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கியது. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து பார்த்து தரிசித்து சென்றனர். இந்த உத்தாலம் மலர் ஐந்து விதமான இதழ்களையும்,
ஐந்து வகையான சுவையையும் உடையது.மருத்துவ குணம் வாய்ந்த இந்த மலர் மனிதர்கள் உண்ண உகந்தது. இந்த உத்தால மரம் உலகில் வேறு எங்கும் இல்லாதது தனிச் சிறப்பு வாய்ந்தது.