உள்ளூர் செய்திகள்
ஒட்டுமொத்த தமிழகமும் முதலமைச்சரின் மாநிலம் தான்- மா.சுப்பிரமணியன்
ஒட்டுமொத்த தமிழகமும் முதலமைச்சரின் மாநிலம் தான், ஒட்டுமொத்த தமிழர்களும் அவர் வழியை பின்பற்றுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை:
திருவாரூர் மாவட்டம் முதல்-அமைச்சரின் சொந்த மாவட்டம் என சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கூறியதற்கு, ஒட்டுமொத்த தமிழகமும் முதலமைச்சரின் மாநிலம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் முதலமைச்சரின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்க வேண்டும் என திருவாரூர் உறுப்பினர் பூண்டி கலைவாணன் கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும், திருவாரூர் மாவட்டம் தான் முதலமைச்சர் மாவட்டம் என உறுப்பினர் கூறியதற்கு, ஒட்டுமொத்த தமிழகமும் முதல்-அமைச்சரின் மாநிலம் தான் என்றும், ஒட்டுமொத்த தமிழர்களும் அவர் வழியை பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டார்.
திருவாரூர் மாவட்டம் முதல்-அமைச்சரின் சொந்த மாவட்டம் என சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கூறியதற்கு, ஒட்டுமொத்த தமிழகமும் முதலமைச்சரின் மாநிலம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் முதலமைச்சரின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்க வேண்டும் என திருவாரூர் உறுப்பினர் பூண்டி கலைவாணன் கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும், திருவாரூர் மாவட்டம் தான் முதலமைச்சர் மாவட்டம் என உறுப்பினர் கூறியதற்கு, ஒட்டுமொத்த தமிழகமும் முதல்-அமைச்சரின் மாநிலம் தான் என்றும், ஒட்டுமொத்த தமிழர்களும் அவர் வழியை பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டார்.