உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-04-03 04:47 GMT   |   Update On 2022-04-03 04:47 GMT
முத்தியால்பேட்டையில் செல்போனில் சூதாடிக் கொண்டிருந்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

புதுவை முத்தியால் பேட்டை சின்னையாபுரம் நகராட்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது37). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு பிரியா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 8 மாத பெண் குழந்தை உள்ளது.

இதற்கிடையே கடந்த 3 நாட்களாக விஜயன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு செல்போனில் சூதாடிக்கொண்டிருந்தார். 

இதுபோல் நேற்று விஜயன் வேலைக்கு செல் லாமல் மது குடித்து விட்டு செல்போனில் சூதாடிக் கொண்டிருந்தார். இதனை அவரது மனைவி பிரியா கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜயன் மனைவி மற்றும் குழந்தை களை தாக்கி  துரத்தி விட்டு வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டார்.

வெகுநேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பிரியா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது படுக்கை அறையில் மின்விசிறியில் கணவன் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து பிரியா முத்தியால் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News