உள்ளூர் செய்திகள்
காரைக்காலில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
காரைக்காலில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் கோட்டுச்சேரி அருகே வரிச்சிக்குடி சோனியாகாந்தி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு சிவக்குமார், முத்துக்குமார்(வயது34), சசிகுமார் என்ற 3 மகன்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இதில், 2வது மகன் முத்துக்குமார் கொத்தனார் வேலை செய்து வந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக முத்துகுமார் தோல் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில வாரமாக தோல் நோயின் காரணமாக, உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு அவதியுற்றுவந்தார்.
அரிப்பு அதிக மாகும்போது, அனைவரிடத்திலும் சண்டை போட்டுவந்துள்ளார். இதனால், அவரது மனைவி ஜோதி, முத்துகுமாரிடம் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அரிப்பு அதிகமானதால், முத்துகுமார் வீட்டின் மின் விசிறியில் புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, அவரது தந்தை வெங்கடேசன், கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேலகாசாகுடி பகுதியைச்சேர்ந்தவர் அருமைதாஸ்(65). செக்யூரிட்டி வேலை செய்து வந்த இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை மற்றும் இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இதில், மது அருந்தும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், நோயிக்கு முறையான மருந்து மாத்திரைகளை சாப்பிடமால் இருந்துவந்தார்.
மேலும் கடந்த வாரம் கையில் ஏற்பட்ட காயத்தால் பெரிய அளவில் அவதியுற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் உள்ள கொக்கி ஒன்றில், கைலியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, அவரது மகன் அல்போன்ஸ்ராஜ், நெடுங்காடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் கோட்டுச்சேரி அருகே வரிச்சிக்குடி சோனியாகாந்தி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு சிவக்குமார், முத்துக்குமார்(வயது34), சசிகுமார் என்ற 3 மகன்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இதில், 2வது மகன் முத்துக்குமார் கொத்தனார் வேலை செய்து வந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக முத்துகுமார் தோல் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில வாரமாக தோல் நோயின் காரணமாக, உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு அவதியுற்றுவந்தார்.
அரிப்பு அதிக மாகும்போது, அனைவரிடத்திலும் சண்டை போட்டுவந்துள்ளார். இதனால், அவரது மனைவி ஜோதி, முத்துகுமாரிடம் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அரிப்பு அதிகமானதால், முத்துகுமார் வீட்டின் மின் விசிறியில் புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, அவரது தந்தை வெங்கடேசன், கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேலகாசாகுடி பகுதியைச்சேர்ந்தவர் அருமைதாஸ்(65). செக்யூரிட்டி வேலை செய்து வந்த இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை மற்றும் இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இதில், மது அருந்தும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், நோயிக்கு முறையான மருந்து மாத்திரைகளை சாப்பிடமால் இருந்துவந்தார்.
மேலும் கடந்த வாரம் கையில் ஏற்பட்ட காயத்தால் பெரிய அளவில் அவதியுற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் உள்ள கொக்கி ஒன்றில், கைலியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, அவரது மகன் அல்போன்ஸ்ராஜ், நெடுங்காடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.