உள்ளூர் செய்திகள்
அமாவாசை நாளான இன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
தாணிப்பாறை வனத்துறை காலை 6.30 மணிக்கு கேட் திறக்கப்பட்டதும் பக்தர்களுக்கு கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தபின்னர் மலையேறி சாமிதரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரம் பகுதியிலிருந்து மலைப்பாதை வழியாக நடந்து சென்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தரிசனம் செய்தனர். மதியம் 12.30மணியிலிருந்து 2மணிவரை பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தாணிப்பாறை அடிவார பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
தாணிப்பாறை வனத்துறை காலை 6.30 மணிக்கு கேட் திறக்கப்பட்டதும் பக்தர்களுக்கு கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தபின்னர் மலையேறி சாமிதரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரம் பகுதியிலிருந்து மலைப்பாதை வழியாக நடந்து சென்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தரிசனம் செய்தனர். மதியம் 12.30மணியிலிருந்து 2மணிவரை பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தாணிப்பாறை அடிவார பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.