உள்ளூர் செய்திகள்
விருதுநகர் அருகே கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள செம்பொன்நெருஞ்சியை சேர்ந்தவர் மீனா(வயது 23). இவருக்கும் விருதுநகர் சூலக்கரையை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
2 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக மீனா கணவரை பிரிந்துவந்து விட்டார். அதன் பிறகு கருப்பசாமி நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு திருச்சுழியில் அவருடன் 3 ஆண்டுகள் வசித்து வந்தார்.
அதன் பிறகு அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நத்தகுளத்தை சேர்ந்த கார்மேகத்துடன் பழக்கம் ஏற்பட்டு சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் கார்மேகம் வேறுபெண்ணை திருமணம் செய்யமுயன்றதை மீனா தட்டிகேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் கார்மேகம் சோளக்காட்டில் வைத்து தன்னை கத்தியால் குத்தியதாக திருச்சுழி போலீசில் புகார் செய்தார். காயமடைந்த அவர் திருச்சுழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி அருகே உள்ள செம்பொன்நெருஞ்சியை சேர்ந்தவர் மீனா(வயது 23). இவருக்கும் விருதுநகர் சூலக்கரையை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
2 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக மீனா கணவரை பிரிந்துவந்து விட்டார். அதன் பிறகு கருப்பசாமி நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு திருச்சுழியில் அவருடன் 3 ஆண்டுகள் வசித்து வந்தார்.
அதன் பிறகு அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நத்தகுளத்தை சேர்ந்த கார்மேகத்துடன் பழக்கம் ஏற்பட்டு சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் கார்மேகம் வேறுபெண்ணை திருமணம் செய்யமுயன்றதை மீனா தட்டிகேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் கார்மேகம் சோளக்காட்டில் வைத்து தன்னை கத்தியால் குத்தியதாக திருச்சுழி போலீசில் புகார் செய்தார். காயமடைந்த அவர் திருச்சுழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.