உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

சிறுவன் பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு 30 ஆண்டு சிறை

Published On 2022-03-30 06:27 GMT   |   Update On 2022-03-30 06:27 GMT
சிறுவன் பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கரூர்:

 கரூர் ஆண்டாங்கோவில் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது46). சலவைத்  தொழிலாளி. இவர் கடந்தாண்டு செப். 19&ந் தேதி தனது பக்கத்து வீட்டை சேர்ந்த 8 வயது  சிறுவனை சாக்லேட், பிஸ்கட் வாங்கி தருவதாகக் கூறி சலவை அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து கரூர் நகர காவல்  நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போக்சோ  சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகவேலை கைது செய்தனர்.

   இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று நீதிபதி ஏ.நசீமாபானு தீர்ப்பை வழங்கினார்.

 சிறுவனை கடத்திச் சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதங்களை செலுத்தத் தவறினால் மேலும் தலா ஒராண்டு மெய்க்காவல் சிறைத்தண்டனை வழங்கியும் இவற்றை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தர விட்டார்.

மேலும் இவ்வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உடல் மற்றும் மனரீதியாக ஏற்பட்ட  பாதிப்புகளுக்கு தமிழக அரசு ரூ.3.50 லட்சம் இழப்பீடாக வழங்க பரிந்துரைத்து உத்தரவிடப் பட்டுள்ளது.
Tags:    

Similar News