உள்ளூர் செய்திகள்
குட்கா விற்ற 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் குளித்தலை உட்பட்ட 15 போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக நிர்மலா (வயது 71), நவீன் (24), காளியப்பன் (50), பெரியசாமி(47), பாக்கியமாள் (70), காளிமுத்து (68), சரவணன் (33), சுப்பிரமணி (44), சாமிநாதன் (60), முனியப்பன் (52), நாகராஜ் (43), சீனிவாசன் (55) உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.