உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் கவுண்டன்யமகாநதி ஆற்றில் காவேரிகூட்டு குடிநீர் திட்ட பணிகளை நகர்மன்றத் தலைவர் சவுந்தரராசன் பார்வையி

குடியாத்தம் நகராட்சி பகுதிகளுக்கு ஓரிரு நாட்களில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம்- அதிகாரிகள் தகவல்

Published On 2022-03-28 15:33 IST   |   Update On 2022-03-28 15:33:00 IST
குடியாத்தம் நகராட்சி பகுதிகளுக்கு ஓரிரு நாட்களில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் நகராட்சிக்கு குடியாத்தம் அடுத்த பாலாற்றில் இருந்து ராட்சத கிணறுகள் மூலம் பசுமாத்தூர் நீரேற்று நிலையம் மூலமாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

கடந்த சில ஆண்டுகளாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடியாத்தம் நகராட்சி இணைக்கப்பட்டு குடியாத்தம் அடுத்த பள்ளிகொண்டா அருகே உள்ள ஹைதர்புரம் பகுதியில் ராட்சத குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு காவிரி கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர் அதில் நிரப்பப்பட்டு அதன் மூலமாக பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடியாத்தம் நகராட்சிக்கு வந்தடைகிறது.

தினமும் 70 லட்சம் லிட்டர் குடிநீர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடியாத்தம் நகராட்சிக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது.

அந்த தண்ணீர் சந்தைப்பேட்டையில் உள்ள ராட்சத தொட்டியில் நிரப்பப்பட்டு அங்கிருந்து குடியாத்தம் நகரில் உள்ள 8 சிறுசிறு குடிநீர் தொட்டிக்கு சென்று அதன் மூலமாக வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

பசுமாத்தூர் நீரேற்று நிலையத்தில் இருந்தும் தினமும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் குடியாத்தம் நகராட்சி சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் பாலாற்றிலும், குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காவிரி குடிநீர் கூட்டு திட்ட பைப்புகள் சேதமடைந்து அடித்து செல்லப்பட்டது.

பசுமாத்தூர் நீரேற்று நிலையத்தில் குடிநீர் சப்ளை செய்யும் 3 ராட்சத கிணறுகளும் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

நகராட்சியில் சிறு மின்விசை பம்புகள் மூலமாகவும், டிராக்டர்கள் மூலமாகவும் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது இருப்பினும் குடிநீர் தேவைக்காக குடியாத்தம் நகராட்சி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். 

நகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பசுமாத்தூர் நீரேற்று நிலையத்தில் இருந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பைப்புகளை சீர்செய்து ஒரளவு குடிநீர் கடந்த சப்ளை செய்து வந்தனர் இருப்பினும் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை.

குடியாத்தம் நகராட்சி பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விரைவாக கிடைக்க அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர் இதனைதொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கவுண்டன்யமகாநதி ஆற்று வழியாக ஆற்றில் செல்லும் சேதமடைந்த காவிரி குடிநீர் கூட்டுக்குடிநீர் திட்ட பைப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் தொடர்ந்து பள்ளிகொண்டா ஹைதர்புரம் பகுதியிலுள்ள கூட்டு குடிநீர் திட்ட சேதமடைந்த பைப்பகளையும் ஆய்வு செய்தனர்.

குடிநீர் வாரிய அதிகாரிகள் பாலாற்றில் வெள்ளம் நின்றதால் போர்க்கால அடிப்படையில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட ராட்சத பைப்புகளை பழுதை நீக்கி சீர் செய்து வந்தனர் இதனால் குடியாத்தம் பகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் ராட்சத பைப்புகள் பழுது சரி செய்யப்பட்டது.

மேலும் குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் வழியாக செல்லும் சேதடைந்த பைப்புகள் சீரமைக்கப்பட்டது.

காவிரி கூட்டு குடிநீர் திட்ட பைப்புகள் சீர்செய்யப்பட்டதை தொடர்ந்து குடியாத்தத்தில் நகராட்சி பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக நான்கு குடிநீர் தொட்டிகளுக்கு மட்டும் தண்ணீர் சப்ளையானது. இதனால் குடியாத்தம் நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் கிடைத்தது. 

மீதமுள்ள பகுதிகளுக்கான கவுண்டன்யமகாநதி ஆற்றின் வழியாகசெல்லும் ராட்சத பைப்புகளின் பழுதை சீர் செய்யும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை நகர்மன்ற தலைவர் எஸ்.சௌந்தரராசன், துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஆட்டோமோகன், தேவகி கார்த்திகேயன், இந்துமதி கோபாலகிருஷ்ணன், ரேணுகாபாபு உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குடியாத்தம் நகரமன்ற தலைவர் சவுந்தரராசன் மற்றும் அதிகாரிகள் கூறியதாவது:-

காவிரி கூட்டு குடிநீர் திட்ட பைப்லைன் சீரமைக்கும் பணிகள் கவுண்டன்யமகாநிதி ஆற்றில் போர்க்கால அடிப்படையில் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

காவிரி தண்ணீர் 2 நாட்களில் குடியாத்தம் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் குடியாத்தம் நகருக்கு தினமும் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைப்பதால் அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் தண்ணீரை பொதுமக்கள் காய்ச்சியும், சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News