உள்ளூர் செய்திகள்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்கள்.

துப்புரவு ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Published On 2022-03-28 15:25 IST   |   Update On 2022-03-28 15:25:00 IST
விருதுநகரில் இன்று துப்புரவு ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் 

விருதுநகர் நகராட்சி வளர்ந்து வரும் நகராட்சியாக உள்ளது. நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப இங்கு அடிப்படை வசதிகளின் தேவை அதிகரித்துள்ளது. நகராட்சியில் தூய்மை பணிக்காக 100 ஒப்பந்த தொழிலாளர்களும், 65 நிரந்தரதொழிலாளர்களும் உள்ளனர்.

இவர்கள் இன்று காலை திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 16அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் விருதுநகர் பழைய பஸ்நிலைய பகுதியில் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

விருதுநகர் நகராட்சியில் துப்புரவுபணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தம் காரணமாக சாலைகள், தெருக்கள் மற்றும் முக்கிய இடங்களில் குப்பைகள் தேங்கின.

Similar News