உள்ளூர் செய்திகள்
.

புளியமரத்துக்கு மர்ம கும்பல் தீ வைப்பு

Published On 2022-03-19 15:47 IST   |   Update On 2022-03-19 15:47:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் புளியமரத்துக்கு தீ வைத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பஸ் நிலையம் அருகில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புளியமரத்துக்கு மர்ம கும்பல் இன்று அதிகாலை மர்ம கும்பல்  தீ வைத்துள்ளனர். இதனால் மளமள என எரிந்த தீயை பொதுமக்களால் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை  யடுத்து தீயணைப்புத் துறையின் சிறப்பு நிலை அலுவலர் தேவராஜன் தலைமையில்  உடனடியாக  வந்து தீயணைப்பு துறையினர் தீயை ஒரு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

இதை அறிந்த கெலமங்கலம் பேரூராட்சி தலைவர் தேவராஜ், துணைத் தலைவர் மும்தாஜ் செயதுஅசேன் ,பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர்  பார்வையிட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News