உள்ளூர் செய்திகள்
தற்கொலை

திருமுல்லைவாயலில் இளம்பெண் தற்கொலை

Published On 2022-03-17 06:08 GMT   |   Update On 2022-03-17 06:08 GMT
திருமுல்லைவாயலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆவடி:

திருமுல்லைவாயல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் அலமேலு. இவரது மகள் மஞ்சுளா (வயது23). அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அலமேலு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வேளச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். வீட்டில் மஞ்சுளா மட்டும் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் மஞ்சுளா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News