உள்ளூர் செய்திகள்
புதுச்சேரியில் 5 பேருக்கு கொரோனா
புதுவையில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் 428 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 2, காரைக்காலில் 3 பேர் என 5 பேர் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 3, மாகியில் ஒருவர் என 4 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 764 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 785 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். புதுவையில் 5, காரைக்காலில் 10, மாகியில் 2 பேர் என 17 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 17 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது.
புதுவையில் 2-வது தவணை உட்பட 16 லட்சத்து 6 ஆயிரத்து 989 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.