உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யூ செயலாளர் ரமேஷ் தொடங்கிவைத்தார்
ஊட்டி:
எல்.ஐ.சி.யின் பங்குகளை பங்கு சந்தையில் பட்டியலிடுவதை எதிர்த்து ஊட்டியில் மெழுகுவர்த்தி ஏந்தி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தைச் சார்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், ஊட்டி கிளையின் தலைவர் ஏ.கோபால், செயலாளர் தினேஷ்ராஜ், 7 பெண் ஊழியர்கள் உள்பட 21 பேர் கலந்துகொண்டனர். இப்போராட்டத்தை நீலகிரி மாவட்ட சி.ஐ.டி.யூ செயலாளர் ரமேஷ் தொடங்கிவைத்தார்.இதில், சி.ஐ.டி.யூ பொறுப்பாளர் சங்கரலிங்கம், முகவர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.