உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பூங்கா நிலத்தை மீட்ட பொதுமக்கள்

Published On 2022-03-11 15:35 IST   |   Update On 2022-03-11 15:35:00 IST
அலமேலு மங்காபுரத்தில் பூங்கா நிலத்தை பொதுமக்கள் மீட்டனர்.
வேலூர்:

வேலூர் அலமேலு மங்காபுரம் எம்.ஜி.பி. நகர் குடியிருப்பு பகுதியில் 86 சென்ட் பூங்கா நிலம் உள்ளது.இதனை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்துள்ளார்.

 இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இன்று காலை பூங்கா நிலத்தில் ஆக்கிரமித்து கொட்டப்பட்டிருந்த மணலை பொக்லைன் எந்திரம் வரவழைத்து அகற்றினர்.

இந்த இடம் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்டது. நீண்ட நாட்களாக தனியார் ஒருவர் ஆக்கிரமித்து வருகிறார்.

தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பூங்கா நிலத்தை மீட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News