உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

Published On 2022-03-11 15:33 IST   |   Update On 2022-03-11 15:33:00 IST
வருகிற 22-ந் தேதி தமிழகம் முழுவதும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
வேலூர்:

இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிமாநில அலுவலகத்தில் நடந்தது.

தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி 22-ந்தேதி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப் பின் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திட தீர்மானிக்கப்பட்டது.

Similar News