உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூரில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.30 லட்சத்திற்கு ஏலம்

Published On 2022-03-10 15:49 IST   |   Update On 2022-03-10 15:49:00 IST
வேலூரில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் குற்ற வழக்குகளில் பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் நேற்று வேலூர் நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்பட்டன. வாகனத்தை ஏலம் எடுக்க வந்தவர்களிடம் ரூ.100 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு பின்னர் அவர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மதுவிலக்கு வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனங் களுக்கு ஏலத்தொகையுடன் இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் விற்பனை வரியும் சேர்த்து வசூலித்தனர்.

மேலும் வழக்குகளில் சம்மந்தப் பட்டுள்ள வாகனங்கள் அனைத்திற்கும் ரசீது வழங்கினர். ஏலம் எடுத்த வாகனத்திற்குண்டான ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணம் என போலீசார் தெரிவித்தனர்.

மொத்தம் 369 வாகனங்கள் ரூ.30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

Similar News