உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூரில் நடிகர் சூர்யா படம் வெளியான தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு

Published On 2022-03-10 15:48 IST   |   Update On 2022-03-10 15:48:00 IST
வேலூரில் நடிகர் சூர்யா படம் வெளியான தியேட்டர்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர்:

நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான ஜெய் பீம் திரைப்படத்திற்கு பா.ம.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் பா.ம.க.வினர் சூர்யாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்து இன்று வெளியான Õஎதற்கும் துணிந்தவன்Õ படத்தை வெளியிட கூடாது என்று பா.ம.க. சார்பில் கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலூரில் இன்று நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 8 தியேட்டர்களில் வெளியானது. தியேட்டர்களில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். 

தியேட்டர்களுக்கு வந்தவர்களை கண்காணித்து உள்ளே அனுப்பி வைத்தனர். தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News