உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-03-10 15:35 IST   |   Update On 2022-03-10 15:35:00 IST
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதன் தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். பரசுராமன், பழனி, முரளி உள்பட 20&க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு சுழற்சிமுறை பணியிடமாறுதல் கொள்கையை உருவாக்கி அமலாக்க வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் ஆணையை ரத்து செய்ய வேண்டும்.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட செலவின தொகை முழுமையாக வழங்கிட வேண்டும். ஐகோர்ட்டு உத்தரவை மேல்முறையீடு செய்யாமல் சட்ட திருத்தம் செய்யாமலும் மதுக்கூடங்களை மூடிவிட வேண்டும்.

டாஸ்மாக் கடை நிர்வாகத்தில் தலையிடும் மதுகூட உரிமையாளர்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Similar News