உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூரில் புகார் வாங்காமல் அலைக்கழித்த பெண் போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு

Published On 2022-03-09 15:15 IST   |   Update On 2022-03-09 15:15:00 IST
வேலூரில் புகார் வாங்காமல் அலைக்கழித்த பெண் போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
வேலூர்:

வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் சசி. இவர் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் புகாரை முறையாக வாங்காமல் அலைக்கழித்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூரை சேர்ந்த ஒருவர் அவரது 10 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். 

இதுகுறித்து சிறுமியின் தாய் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தார். அவரிடம் புகாரை வாங்காமல் ஏட்டு சசி அலைக் கழித்தார்.

உயரதிகாரிகளின் தலையீட்டுக்கு பிறகு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டார்.

புகார் மனுவை வாங்காமல் அலைக்கழித்த பெண் போலீஸ் ஏட்டு மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் விசாரணை நடத்தினார். அதில் ஏட்டு சசி புகார் கொடுக்க வருபவர்களை தொடர்ந்து அலைக்கழித்தது தெரியவந்தது.

இதையடுத்து ஏட்டு சசியை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டார்.

Similar News