உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சேத்துப்பட்டில் பஸ்-பைக் மோதி வாலிபர் பலி

Published On 2022-03-07 15:09 IST   |   Update On 2022-03-07 15:09:00 IST
சேத்துப்பட்டில் பஸ்-பைக் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மகன் ஞானசேகர் (வயது 35) திருமணம் ஆகவில்லை. 

ஞானசேகர் மோட்டார் சைக்கிளில் வயலூர் கிராமத்திலிருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்தவாசி ரோட்டில் வந்து கொண்டிருந்தார். 

சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது மேல்மலையனூரில் வந்த சுற்றுலா பஸ் பைக் மீது மோதியது இதில்  தூக்கி வீசப்பட்ட ஞானசேகர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சேத்துப்பட்டு போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News