உள்ளூர் செய்திகள்
வேலூரில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
வேலூர்:
வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த வளாகத் தேர்வில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையை சேர்ந்த 92 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் கலந்தாய்வு தேர்வு நடந்தது. இதில் 46 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.