உள்ளூர் செய்திகள்
10 வயது மகளுக்கு தந்தை பாலியல் தொல்லை
10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் தொரப்பாடியை சேர்ந்த 36 வயது ஆண் ஒருவருக்கு 10 வயதில் மகள் உள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தாய் வீட்டில் மனைவி வசித்து வருகிறார். சிறுமி தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி பூப்பெய்தினார். சிறுமியை பார்க்க வந்த அவரது பாட்டி ஆண்களிடம் பழக கூடாது, ஆண்கள் தொட்டு பேச அனுமதிக்க கூடாது என அறிவுரை வழங்கினார்.
அப்போது சிறுமி தன்னுடைய தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததாக பாட்டியிடம் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி தன்னுடைய மகளுக்கு இந்த தகவலை கூறினார்.
இதுகுறித்து அவர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷாகின் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிறுமியின் தந்தையை தேடி வருகின்றார்.
தந்தையே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.