உள்ளூர் செய்திகள்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா எழுதிய கவிதையை பெண் போலீசாருக்கு வழங்கினார்.

போலீசாருக்கு ஒழுக்கம் மிக முக்கியம் -டி.ஐ.ஜி பேச்சு

Published On 2022-03-06 14:31 IST   |   Update On 2022-03-06 14:31:00 IST
போலீசாருக்கு ஒழுக்கம் மிக முக்கியம் என டி.ஐ.ஜி பேசினார்.
வேலூர்:

வேலூர் சரக காவல்துறை சார்பில் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காக்கி பூக்களின் திருவிழா இன்று நடந்தது. 

இந்நிகழ்ச்சிக்கு வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ் கண்ணன் (வேலூர்), தீபா சத்யன் (ராணிப்பேட்டை), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்), கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். 

பெண் போலீசாருக்கு டி.ஐ.ஜி மரக்கன்றுகள் வழங்கி பேசியதாவது:- 
போலீசாருக்கு ஒழுக்கம் மிக முக்கியம்.ஒழுக்கமாக இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். 

போலீசார் எப்போதும் கலர் புல்லாக இருக்க வேண்டும். தங்கள் பணியை திறம்பட செய்ய வேண்டும்.  இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். 

நிகழ்ச்சியில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண் போலீசார் கலந்து கொண்டனர். 

மேலும் பெண் போலீசார் பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடினர். அவருடன் இணைந்து டி.ஐ.ஜி ஆனி விஜயா, போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆகியோரும் உற்சாகமாக நடனமாடி அசத்தினர்.

Similar News