உள்ளூர் செய்திகள்
சிறுத்தை தாக்கி கன்று குட்டி உயிரிழந்த காட்சி.

தண்டராம்பட்டு காப்புக்காடு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

Published On 2022-03-06 14:05 IST   |   Update On 2022-03-06 14:05:00 IST
தண்டராம்பட்டு காப்புக்காடு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ராதாபுரத்தில் அரசுக்கு சொந்தமான காப்பு காடுகள் மற்றும் வனப்பகுதிகள் அதிகளவில் உள்ளது.

இந்த வனப்பகுதிகளில் அதிகளவில் மான் முயல் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளது. 

இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும் அதனை அவ்வழியாக சென்றவர்கள் புகைப்படம் எடுத்தும் தெரிவித்தனர். 

இதுகுறித்து தண்டராம்பட்டு வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் அப்போது அப்பகுதியில் கன்று ஒன்று சிறுத்தை தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கு தீவிர பாதுகாப்பு போடப்பட்டு தொடர்ந்து சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கப்பட்டு வருகிறது மேலும் வனத்துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News