உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

செய்யாறு அருகே பம்புசெட்டில் ஒயரை திருடிய வாலிபர் கைது

Published On 2022-03-06 14:05 IST   |   Update On 2022-03-06 14:05:00 IST
செய்யாறு அருகே பம்புசெட்டில் ஒயரை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செய்யாறு:

செய்யாறு டவுன், சேரன் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 45), இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். 

இவருக்கு சொந்தமாக விளைநிலம் செய்யாறு பகுதியில் உள்ளது. நேற்று காலையில் தண்ணீர் விடுவதற்கதாக சென்றார். 

அப்போது மின் மோட்டாரை இயக்க சென்றபோது பம்ப் செட்டில் இருந்து மோட்டாருக்கு செல்லும் 20 மீட்டர் காப்பர் ஒயரை யாரோ அறுத்து திருடிச் சென்றுள்ளனர்.

இது சம்பந்தமாக நரசிம்மன் மோரணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்&இன்ஸ்பெக்டர் பாரி அண்ண பாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் செங்கட்டான் குண்டில் கிராமத்தை சேர்ந்த ஐடிஐ படித்துள்ள நிஷாந்த் வயது 19, என்ற வாலிபர் காப்பர் ஒயரை திருடியது தெரிய வந்தது.

போலீசார் நிஷாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News