உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பஸ்சில் கடத்தி வந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2022-03-05 14:50 IST   |   Update On 2022-03-05 14:50:00 IST
காட்பாடி அருகே பஸ்சில் கடத்தி வந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:

காட்பாடியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவிலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தி வரப்படுகின்றன. இதை தடுக்க அடிக்கடி ஆந்திர எல்லையோரம் உள்ள சோதனைச் சாவடிகளில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.இளங்கோவன் தலைமையில் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனைச் சாவடியில் வாகனங்களை மறித்து சோதனையிட்டனர்.

ஆந்திராவில் இருந்து வந்த பஸ்களிலும் சோதனை நடத்தினர்.அப்போது சித்தூரை சேர்ந்த கஜபதி (வயது 50) என்பவர் 5 கிலோ கஞ்சா பஸ்சில் கடத்தி வந்தார். அவரை கைது செய்தனர். 

மேலும் அவர் கடத்தி வந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். எங்கிருந்து யாருக்கு கஞ்சா கடத்தி வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News