உள்ளூர் செய்திகள்
போளூரில் தீக்குளித்து பெண் தற்கொலை
போளூரில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
போளூர்:
போளூர் அருகே உள்ள ராந்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன் விவசாயி இவரது மனைவி லதா (வயது 43). இவர்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் வாசுகி மட்டும் திருமணமாகிவிட்டது அருகில் செமிய மங்கலம் கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் லதாவுக்கும் வாசுதேவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் கடந்த 1&ந் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு லதாவின் மகன் அப்பு குமார் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோர் அவரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
தீக்காயம் மிக அதிகமாக இருக்க அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து இறந்த லதாவின் மூத்த மகள் வாசுகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.