உள்ளூர் செய்திகள்
திருமணம்

தண்டையார்பேட்டையில் தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

Published On 2022-03-05 07:52 GMT   |   Update On 2022-03-05 07:52 GMT
திருமணம் நடைபெறததால் மணமகனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெண் வீட்டார் மீது தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
ராயபுரம்:

அம்பத்தூரை சேர்ந்த வாலிபருக்கும் தாம்பரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தண்டையார்பேட்டையில் உள்ள அம்மன் கோவிலில் நேற்று காலை திருமணம் நடக்க இருந்தது.

இந்த நிலையில் தாலி கட்டும் போது கடைசி நிமிடத்தில் மணப்பெண் மயங்கி விழுந்தார். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர் மயக்கம் தெளிந்து விசாரித்தபோது அந்தப் பெண்ணிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து மணமகனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெண் வீட்டார் மீது தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரில் திருமணம் முடிந்த பின்னர் அம்பத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு செலவான பணத்தினை பெற்றுத்தருமாறு தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News