உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

போக்சோவில் எலக்ட்ரீசியன் கைது

Published On 2022-03-05 06:26 GMT   |   Update On 2022-03-05 06:26 GMT
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் எலக்ட்ரீசியனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
திருச்சி:

திருச்சி எடலைப்பட்டி புதூரில் உள்ள மளிகைக் கடைக்காரரின் மகள் அரசு கல்லூரியில் மருந்தியல் படித்து வருகிறார். இவர் செல்போனில் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பாராம். இதனால் அவரை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.

இதனால் வீட்டிலிருந்து வெளியே சென்ற அப்பெண் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், எடமலைப்பட்டி புதூர் போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வந்தனர். 

போலீசாரின் விசாரணையில் திரச்சி மாவட்டம் லால்குடி புதூர் உத்தமனூர் கீழத்தெருவைச் சேர்ந்த எலக்ட்ரீசியனான ஈஸ்வரன் (வயது 24) என்பவர் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து  அவரை போலீசார் பிடித்து மாணவியை மீட்டு எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் திருச்சியில் வேலைக்காக வந்து சென்ற போது ஷேர் ஆட்டோவில் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது தெரியவந்தது. தொடர்ந்து கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர்  போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  
Tags:    

Similar News