உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பேரணாம்பட்டு நகரசபையை திமுக கைபற்றியது

Published On 2022-03-04 16:57 IST   |   Update On 2022-03-04 16:57:00 IST
பேரணாம்பட்டு நகரசபையை தலைவராக திமுகவேட்பாளர் பிரேமா வெற்றிவேல் தேர்வு செய்யப்பட்டார்.
பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. இதில் திமுக - 14, காங்கிரஸ் 1, மனித நேய மக்கள் கட்சி 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1 சுயேட்சைகள் - 4 வார்டுகளில் வெற்றிபெற்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. 

தேர்தலில் திமுக சார்பில் நகரமன்ற தலைவர் பதவிக்கு பிரேமா வெற்றிவேல், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தன்வீரா பேகம் ஆகியோர் போட்டியிட்டனர். திமுக சார்பில் போட்டியிட்ட பிரேமா வெற்றிவேல் 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தன்வீரா 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

Similar News