உள்ளூர் செய்திகள்
முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய காட்சி.

ஏழை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவ வேண்டும்- முதன்மை கல்வி அலுவலர் பேச்சு

Published On 2022-03-03 16:20 IST   |   Update On 2022-03-03 16:20:00 IST
ஏழை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவ வேண்டும் முதன்மை கல்வி அலுவலர் பேசினார்.
வேலூர்:

வேலூர் மாவட்ட ஜுனியர் ரெட்கிராஸ் அலுவலகத்தில் ஆசிரியர் களுக்கான பாராட்டு விழா இன்று நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கி சான்றிதழ்களை வழங்கினார்.அவர் பேசியதாவது:-

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பினை ஏற்று பள்ளிக்கல்வித்துறையின் ஜூனியர் ரெட் கிராஸ் நாட்டு நலப்பணித்திட்டம் பாரத சாரண சாரணியர் மற்றும் தேசிய மாணவர் படையின் அங்கம் வகிக்கும் ஆசிரியப் பெருமக்கள் தன்னார்வமாக கலந்துகொண்டு பல்வேறு உதவிகளை செய்து இருக்கிறார்கள்.
அவர்களை நான் பாராட்டுகிறேன்.

நாம் அனைவரும் முடிந்த வரையில் உதவிகளை செய்ய வேண்டும்.கொடுக்க வேண்டும் என்ற மனசு இருக்க வேண்டும் நம்முடைய வாழ்நாளில் நாம் உதவிகள் செய்தோம் என்ற ஒரு பதிவு இருக்க வேண்டும்.

பள்ளியில் படிக்க கூடிய ஏழை மாணவர்களின் கல்வி நலனில் ஆசிரியர்கள் அக்கறை கொண்டு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்க அவர்கள் கல்வி நலன் மேம்பட நாம் அனைவரும் இணைந்து செயலாற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்வில் 120 ஆசிரியருக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றுப் பேசினார். பாரத சாரண சாரணிய மாவட்ட செயலாளர் அ.சிவக்குமார் இணை அமைப்பாளர் எஸ்.ரகுபதி இந்தியன் ரெட் கிராஸ் காட்பாடி வட்ட கிளை துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் துணைக் குழு தலைவர் எஸ்.எஸ்.சிவவடிவு தலைமை ஆசிரியர் டி.திருநாவுக்கரசு பள்ளி துணை ஆய்வாளர் அ.மணிவாசகம் கலந்து கொண்டனர்.
முடிவில் ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட பொருளாளர் க.குணசேகரன் நன்றி கூறினார்.

Similar News