உள்ளூர் செய்திகள்
அங்காளம்மன் கோவிலில் மயான சூரை நிகழ்ச்சி
சீர்காழி தென்பாதி அங்காளம்மன் கோவிலில் மயான சூரை நிகழ்ச்சி நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே ராஜராஜேஸ்வரி எனும் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயான சூரை நிகழ்ச்சிவெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயான சூரை நடந்தது. முன்னதாக பக்தர்கள் பால்குடங்கள், பறவைக் காவடி, அலகு காவடி எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.அதேபோல் சிறுதேரோட்டம் நடந்தது.
பின்னர் இரவு பேச்சி அம்மன் ரூபத்தில் அங்காளம்மன் எழுந்தருளி ஆட்டத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மயான
சூறை நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.