உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் மாநகராட்சியில் 3 சுயேட்சை கவுன்சிலர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு

Published On 2022-03-02 17:00 IST   |   Update On 2022-03-02 17:00:00 IST
வேலூர் மாநகராட்சியில் 3 சுயேட்சை கவுன்சிலர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
வேலூர்:

வேலூர் மாநகராட்சியில் தேர்தலில் 44 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றது அந்த கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 3 பேர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 6-வது வார்டில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற சீனிவாசன் தி.மு.க.வில் இணைந்தார்.

இதேபோல 19-வது வார்டில் வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளர் மாலதி 48-வது வார்டில் வெற்றிபெற்ற சுயேட்சை கவுன்சிலர் கோகிலா ஆகியோர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இதன்மூலம் வேலூர் மாநகராட்சியில் தி.மு.க.வின் பலம் 48 ஆக உயர்ந்துள்ளது.

Similar News