உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

உக்ரைனில் தவிக்கும் வேலூர் மாணவி விரைவில் தமிழகம் வருவதாக தகவல்

Published On 2022-03-02 17:00 IST   |   Update On 2022-03-02 17:00:00 IST
உக்ரைனில் தவிக்கும் வேலூர் மாணவி விரைவில் தமிழகம் வந்து விடுவதாக தெரிவித்துள்ளார்.
வேலூர்:

வேலு£ர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள ஆசனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஞான சேகரன் மகன் ராகவன், வேலு£ர் தோட்டப்பாளை யத்தை சேர்ந்த ஜெய்சங்கர் மகள் தீபா உட்பட 10&க்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளனர்.

உக்ரைன், ரஷியா போரால் மாணவிகளின் பெற்றோர் அங்கிருந்து அவர்களை மீட்டு தரும்படி கலெக்டர் குமாரவேல் பாண்டியனி டம் கோரிக்கை வைத்தனர். 

தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் அவர்களை தொடர்பு கொண்டபோது, தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், இந்திய தூதர கம் இங்கிருந்து மீட்கும் வரையில் பாதுகாப்பாக இங்கே இருக்க அறிவுறுத் தியுள்ளதாக தெரிவித்தனர்.

ஓல் மாநிலத்தில் டோவா இருந்து நேற்று ஒரு பஸ் மூலமாக அங்கு தங்கியி ருந்த தீபா உட்பட 40 பேர் பத்திரமாக அழைத்து வரப் படுவதாக தகவல் தெரிவிக் கப்பட்டது.

இதுகுறித்து, தீபா கூறியிருப்பதாவது:-

ஓல்டோவா மருத்துவ பல்கலைக்கழ கத்தில் இருந்து என்னுடன் 40 மாணவர்கள் ஹங்கே ரிக்கு பஸ்சில் அழைத்து செல்லப்படுகி றார்கள். தொடர்ந்து, இன்று மாலைக்குள் ஹங்கேரிக்கு வந்து விடுவோம். 

அங்கிருந்து தமிழகத்துக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவ தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகம் திரும்புவோம் என தெரிவித்தார்.

Similar News