உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அம்ரித்

உக்ரைனில் தவிப்பவர்களின் விவரங்களை கலெக்டர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம் - கலெக்டர் அம்ரித் தகவல்

Published On 2022-03-02 17:00 IST   |   Update On 2022-03-02 17:00:00 IST
உக்ரைனில் கல்வி கற்று வரும் 13 மாணவர்களின் விவரங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வரப்பெற்றுள்ளது.
ஊட்டி:

ரஷியா- உக்ரைன் போர் காரணமாக உக்ரைனில் கல்வி கற்று வரும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், அங்கு குடியேறி வசித்து வருபவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர்  அம்ரித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

 நீலகிரி மாவட்டத்தில் உக்ரைனில் கல்வி கற்று வரும் 13 மாணவர்களின் விவரங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வரப்பெற்றுள்ளது. அதற்கு ஏதுவாக மாணவர்கள், குடியேறியவர்கள் பெயர், பாஸ்போர்ட் எண், உக்ரைனில் வசித்து வரும் இருப்பிடம், கல்லூரி முகவரி, அங்கு உபயோகித்து வரும் செல்போன் எண், பணியில் இருப்பின் அதன் விவரம், தமிழகத்தில் வசிப்பிட முகவரி, இங்கு உள்ள செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, உறவினரின் முகவரி, செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை நேரில் அணுகலாம். அத்துடன் 0423-2444013 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News