உள்ளூர் செய்திகள்
உயர்கல்வி வழிகாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டு கருத்தரங்கம்

Published On 2022-02-28 15:47 IST   |   Update On 2022-02-28 15:47:00 IST
கோமல் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் பாஸ்கர் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் சங்க தலைவர் பொறியாளர் சுகுமார் வரவேற்றார். செயலாளர் ரவீந்திரபாரதி, பொருளாளர் இமயவரம்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னை ஸ்டூடன்ஸ் விஷன் அகாடமி தலைவர் கல்வியாளர் ராஜாராமன் கருத்தரங்கை நடத்தினார். 

கல்வியாளர் வசந்தி ராஜாராமன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார். இதில், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செந்தில், ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News