உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தாயின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் உக்ரைனில் தவிக்கும் பேரணாம்பட்டு மாணவர்

Published On 2022-02-28 14:56 IST   |   Update On 2022-02-28 14:56:00 IST
தாயின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் உக்ரைனில் பேரணாம்பட்டு மாணவர் தவித்து வருகிறார்.
பேரணாம்பட்டு

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து குண்டு மழை பொழிந்து வருகிறது. அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கொத்தூர் ஊராட்சி புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கரன் விவசாயி இவரது 2&வது மகன் சக்திவேல் இவர் உக்ரைன் நாட்டில் முஜைல் நகா¤ல்  உள்ள மருத்துவ பல்கலைகழகத்தில்   மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் சக்திவேல் தவித்து வருகிறார். 

இவரது தாயார் சசிகலா (53) ஏற்கனவே சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு  வந்த இவர் தனது மகன் உக்ரைன் நாட்டில் போர் நடத்தும் பகுதியில் சிக்கியிருப்பது கேள்விப்பட்டு மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு திடீரென  மயங்கி விழுந்தார். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பா¤தாபமாக உயி£¤ழந்தார். சசிகலா இறந்த தகவல் அவரது மகன் சக்திவேலுக்கு வீடியோ கால் மூலம் தொ¤விக்கப்பட்டது. 

இறந்த தாயின் முகத்தை  நோ¤ல் பார்க்க  முடியாமல்  இறுதி சடங்கு செய்ய   முடியாமல் வீடியோ காலில் பார்த்து கண்ணீருடன்  கதறி  அழுதார். இந்த சம்பவம் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Similar News