உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பெரணமல்லூரில் மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்

Published On 2022-02-28 14:23 IST   |   Update On 2022-02-28 14:23:00 IST
பெரணமல்லூர் அருகே மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல் செய்யப்பட்டது.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள கொருகாத்தூரில் போலீஸ் சப்-&இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் போலீசார் மணல் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

 அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை மடக்கி சோதனை செய்ததில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியது தெரியவந்தது. 

இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்து மாட்டு வண்டி ஓட்டி வந்தவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News