உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

திருவண்ணாமலை அருகே புதுப்பெண் தற்கொலை

Published On 2022-02-28 14:19 IST   |   Update On 2022-02-28 14:19:00 IST
திருவண்ணாமலை அருகே புதுப்பெண் தற்கொலை குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே உள்ள வேடந்தவாடி வாநத்தம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 38) இவரது மனைவி சண்முகசுந்தரி (32) இவர்களுக்கு கடந்த 2001-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. 

இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் வேதனையடைந்த சண்முகசுந்தரி கடந்த 22&ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். 

அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். 

இதுபற்றிய புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுப்பெண் திருமணமான 10 மாதங்களில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் இதுதொடர்பாக திருவண்ணாமலை ஆர்.டி.ஓ. வெற்றிவேலும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Similar News