உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பாலகொலா கிராமத்தில் தூய்மை பணி மேற்கொண்ட கல்லூரி மாணவிகள்

Published On 2022-02-27 16:05 IST   |   Update On 2022-02-27 16:05:00 IST
பாலகொலா பஸ் நிலையம் மற்றும் ஊர்வளாகம் தூய்மைபடுத்தப்பட்டது.
கோத்தகிரி:


எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு ஒன்றின் சார்பாக 8 நாட்களுக்கான சிறப்பு முகாம்  நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாலகொலா கிராமத்தில்  நடந்தது.  மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி வளாகம் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகளால் தூய்மைப்படுத்தப்பட்டது. 

மேலும் பின்பு நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் வீடு வீடாகச் சென்று நெகிழியை தவிர்ப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பாலகொலா பேருந்து நிலையம் மற்றும் ஊர் வளாகம் தூய்மைபடுத்தப்பட்டது.

Similar News