உள்ளூர் செய்திகள்
பசுமாடு ஈன்ற இரட்டை தலை கன்று இறப்பு
சீர்காழி அருகே பசுமாடு ஈன்ற இரட்டை தலை கன்று இறந்துள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோயில் கிராமத்தை சேர்ந்தவர் ரவி இவரது பசு மாடு நேற்று காலை இரட்டைத் தலையுடன் ஒரு கன்று ஈன்றது.
இதனை பார்த்த மாட்டின் உரிமையாளர் ரவி மற்றும் குடும்பத்தினர் வியப்புடன் பார்த்தனர், பிறந்து சில மணி நேரத்தில் கன்று இறந்ததை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் இரட்டைத் தலையுடன் கூடிய கன்றை பார்க்க ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.
பசுமாடு, தான் ஈன்ற கன்று இறந்தது தெரியாமல் கன்றை முட்டி எழுப்பி விடும் முயற்சியில் ஈடுபட்டது. இதை பார்த்த மாட்டின் உரிமையாளர் பொது மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.