உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சேத்துப்பட்டில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2022-02-27 14:40 IST   |   Update On 2022-02-27 14:40:00 IST
சேத்துப்பட்டு அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 80). கூலி தொழிலாளி. 

இவருக்கு உடல்நல குறைவால் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனளிக்காததால் மனஉளைச்சலுக்கு ஆளானார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முனுசாமி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். 

இதையடுத்து அவரை மீட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக இறந்தார்.
 
இதுகுறித்து முனுசாமியின் மகன் ரவி சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News