உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

திருவண்ணாமலையில் ஆதிதிராவிட விவசாயிகள் மின்மோட்டார் பைப்புகள் வாங்க 50 சதவீதம் மானியம்

Published On 2022-02-26 13:55 IST   |   Update On 2022-02-26 13:55:00 IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிட விவசாயிகள் மின்மோட்டார் பைப்புகள் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு விவசாய நிலத்தில் பீ.வி.சி.பைப் அமைத்தல் மற்றும் விவசாய பம்பு செட்டிற்கு புதிய மின் மோட்டார் வாங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

விவசாய நிலத்தில் நீர்பாசன வசதிக்காக பிவிசி பைப் அமைக்க திட்டத் தொகையில் 50 சதவிகிதம் மானியம் அதிகபட்சம் ரூ.15,000 மற்றும் விவசாய பம்பு செட்டிற்கு புதிய மின் மோட்டார் வாங்க திட்டத்தொகையில் 50 சதவிகிதம் அதிகபட்சம் ரூ.10,000மானியமாக வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்டுள்ள திட்டங்களில் பயன்பெற விருப்பம் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் தாட்கோ இணையதள வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து. பயன்பெறலாம். 

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் சாதி சான்று, குடும்ப ஆண்டு வருவாய் சான்று, ஆதார் அடையாள அட்டை, பதிவு பெற்ற நிறுவனங்கள் மூலம் பெற்ற விலைப்புள்ளி, நிலத்திற்கான ஆவணங்கள் போட்டோ ஆகிய விவரங்களுடன். 

அதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவராக இருப்பின் www.application.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவராக இருப்பின் www.fast.tahdco.com என்ற இணையதன முகவரியிலும் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

இத்திட்டம் தொடர்பாக மேலும் விவரங்கள் பெற மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, (முதல் தளம்) மாவட்ட கலெக்டர்அலுவலகம், வேங்கிக்கால், திருவண்ணாமலை எண். 04175&232366) என்ற முகவரியில் தொடர்புகொண்டு விவரங்கள் பெற்று பயன்பெறுமாறு திருவண்ணாமலை கலெக்டர்.பா.முருகேஷ் கேட்டு கொண்டுள்ளார்.

Similar News