உள்ளூர் செய்திகள்
தாய்ப்பால் வழங்கி தாய்மார்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பெண்.

மயிலாடுதுறையில் தாய்ப்பாலை தானமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்

Published On 2022-02-26 12:04 IST   |   Update On 2022-02-26 12:04:00 IST
மயிலாடுதுறையில் மாமனார் பிறந்த நாளை முன்னிட்டு தாய்ப்பாலை தானமாக வழங்கி பெண் ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் தனது மாமனாரின் பிறந்த நாளை முன்னிட்டு, தாய்ப்பாலை தானமாக வழங்கி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார் ஒரு பெண்.

குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அல்லது பிரசவத்தின்போது ஏற்படும் மன உளைச்சலின் காரணமாக தாய்க்கு பால் சுரக்காமல் போவது, பிரசவத்தின் போது தாய் உயிரிழந்து விடுவது ஆகிய காரணங்களால் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்காமல் போகக்கூடும். 

இத்தகைய குழந்தைகளுக்கு புட்டிப்பால் வழங்கினால் அக்குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தாய்ப்பாலின் அவசியத்தை உணர்ந்த மயிலாடுதுறை அறக்கட்டளையின் அறங்காவலரான, 4 மாத குழந்தைக்கு தாயான வினிதா சுதாகர் என்பவர், தனது குழந்தைக்கு தாய்ப்பால் தேவைப்படுவது போன்றே, தாயை இழந்த அல்லது தாயால் பால் தரமுடியாத குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள தாய்ப்பாலின் அவசியத்தைப் புரிந்து, தனது மாமனாரும், மயிலாடுதுறை அறக்கட்டளையின் நிறுவனருமான தமிழ்ச்செல்வனின் 67-வது பிறந்த நாளில் தாய்ப்பாலை தானமாக வழங்கி நெகிழ்ச்சி ஏற்படுத்திதியுள்ளார்.

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் தாய்ப்பால் தானம் விழிப்புணர்வுக்காக 2 லிட்டர் தாய்ப்பாலை, மாவட்ட மருத்துவ அலுவலர் மகேந்திரன், மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலர் ராஜசேகர், குழந்தைகள் நல மருத்துவர்கள் பாலாஜி, பரத்குமார் முன்னிலையில், தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதனிடம் தாய்ப்பாலை தானமாக வழங்கினார்.

நிகழ்ச்சியில், அறக்கட்டளை அறங்காவலர் வழக்கறிஞர் சுதாகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News