உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

செய்யாறு அருகே தச்சுத் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

Published On 2022-02-25 14:58 IST   |   Update On 2022-02-25 14:58:00 IST
செய்யாறு அருகே தச்சுத் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.
செய்யாறு:

செய்யாறு அருகே மோரணம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 69). இவர் மர தச்சு வேலை செய்து வந்தார். 

இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். விஸ்வநாதனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். 

அப்போது சுடுகாடு அருகே வரும் போது திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்தார். இதுகுறித்து முதல் மனைவி இந்து மதியிடம் அந்த வழியாக சென்றவர்கள் தெரிவித்தனர். 

இதுகுறித்து இந்துமதி மோரணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News