உள்ளூர் செய்திகள்
பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர்.

அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா தொடக்கம்

Published On 2022-02-25 14:47 IST   |   Update On 2022-02-25 14:47:00 IST
சீர்காழி தென்பாதி அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சீர்காழி:

சீர்காழி தென்பாதியில் ராஜராஜேஸ்வரி அம்மன் என்னும் அங்காளம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சிவராத்திரியையொட்டி பத்து நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். 

அதன்படி இந்த ஆண்டு சிவராத்திரி உற்சவம் காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக உற்சவ கொடி ஏற்றப்பட்டது. அதன்பின்னர் 
நாகேஸ்வரமுடையார் கோவில் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் அலகு காவடி எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.

கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மயான சூறை மார்ச் 1 சிவராத்திரி அன்று நடை பெற உள்ளது.

Similar News