உள்ளூர் செய்திகள்
பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

பள்ளியில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

Published On 2022-02-25 14:44 IST   |   Update On 2022-02-25 14:44:00 IST
கொள்ளிடம் அருகே அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
சீர்காழி:

கொள்ளிடம் அருகே உள்ள கோதண்டபுரம் அரசு உதவிபெறும் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் 117-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு ரோட்டரி துணை ஆளுநர் வைத்தியநாதன் தலைமை வகித்தார்.செயலாளர் குமார், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

டெம்பிள்டவுன் ரோட்டரி சங்க தலைவர் சிங்.ஆறுமுகம் கலந்து கொண்டு பள்ளிக்கு தேவையான 50 பிளாஸ்டிக் சேர்கள், 200 முகக்கவசங்கள், கணினிக்கு தேவையான பேப்பர் கட்டுகள்வழங்கினார், மரக்கன்றுகள் வழங்கினார்.

இதேபோல் சீர்காழி காமராஜர் வீதியில் டெம்பிள் டவுன் ரோட்டரிசங்கம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைவர் ஆறுமுகம் தலைமையில் முன்னாள் தலைவர்கள் மோகனசுந்தரம், துரை, ரவிச்சந்திரன், முன்னாள் செயலாளர் துரைராஜ் கலந்துக்கொண்டு 300 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

Similar News